Showing posts with label corruption. Show all posts
Showing posts with label corruption. Show all posts

Sunday, March 25, 2012

"Active" President of India - A Proud moment for every Indian

New Delhi: President Pratibha Patil's foreign travel has cost the public exchequer a whopping Rs. 205 crore on her foreign visits, surpassing the record of all her predecessors.

Since assuming office as the country's first woman President in July 2007, Patil has undertaken 12 foreign trips covering 22 countries across four continents. She has four more months to go for her five-year tenure and she is slated to make a trip to South Africa later this year.

A series of RTI applications has revealed that Air India incurred over Rs. 169 crore on use of chartered aircraft, always a Boeing 747-400, on the foreign visits by Patil, mostly accompanied by her family members. A visit to Bhutan was covered by a smaller jet.

A further sum of nearly Rs. 36 crore has been incurred by the Ministry of External Affairs on accommodation, local travel, daily allowance and "miscellaneous" expenses, according to the information provided by the ministry.

The RTI applications were filed over a period of three years during which the authorities concerned showed great reluctance to reveal information.

The Ministry of Defence, which pays Air India for use of chartered aircraft by the President, fended off RTI queries and provided little information.

Air India has billed the Defence Ministry for over Rs. 169 crore on account of aircraft used by Patil. Of this, the Ministry has paid nearly Rs. 153 crore, leaving unpaid bills of about Rs. 16 crore.

Patil has so far visited Brazil, Mexico, Chile, Bhutan, Vietnam, Indonesia, Spain, Poland, Russia, Tajikistan, the UK, Cyprus, China, Laos, Cambodia, the UAE, Syria, Mauritius, South Korea, Switzerland and Austria spending a total of 79 days abroad.


Read more at: http://www.ndtv.com/article/india/president-pratibha-patils-foreign-trips-cost-record-rs-205-cr-189822?pfrom=home-otherstories&cp

source"dinakaran - 9/5/2012
செஷல்ஸ், தென்ஆப்ரிக்கா நாடுகளில் 9 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று நாடு திரும்பினார்.
அரசு முறை பயணமாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கடந்த மாதம் 29ம் தேதி செஷல்ஸ் தீவுக்கு சென்றார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அந்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா சார்பில் ரூ.400 கோடி நிதியுதவி அறிவித்தார். 2 நாள் பயணத்தை முடித்து செஷல்ஸ் தீவில் இருந்து தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்ற பிரதிபா, அங்கு 7 நாள் சுற் றுப் பயணம் மேற்கொண் டார். அந்நாட்டு அதிபர் ஜாக்கப்ப ஜூமாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். வர்த்தக ஒப்பந்தங்களும் கையெ ழுத்தாயின. ஜோகன்னஸ் பர்க்கில் மகாத்மா காந்தி சிறையில் இருந்த இடத்தில் அவரது சிலையை பிரதிபா திறந்து வைத்தார். 9 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதிபா, சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை டெல்லி திரும்பினார்.
பிரதிபாவின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிகிறது. ஜனாதிபதி என்ற முறையில் இதுவே பிரதிபா மேற்கொண்ட கடைசி சுற்றுப்பயணம்.

பிரதிபா வெளிநாட்டு பயணம் செல்லும்போது தனது குடும்பத்தினர், உறவினர்களையும் அதிகளவில் அழைத்து செல்வதால் அரசுக்கு அதிகள வில் செலவு ஆவதாக சர்ச்சை எழுந்துள்ளது. தனது பதவி காலத்தில் பிரதிபா இதுவரை 12,க்கும் மேற்பட்ட முறை வெளிநாட்டு சுற்று பயணம் மேற்கொண்டதில் ரூ.200 கோடி செலவாகியுள்ளது. இதை நியாயப்படுத்தியும், வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதிபா உதவுவதாக ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டது. இது குறித்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதிபா, ‘மத்திய அரசு கேட்டு கொள்வதால், நாட்டின் வளர்ச்சிக்காகவே சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இது பற்றி தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் கூறுகிறேன்’’ என்றார். பிரதிபா ஓய்வு பெற்ற பின் புனேயில் வசிக்க நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்ததால் அந்த திட்டத்தை பிரதிபா கைவிட் டார். ஓய்வுக்கு பின் எங்கு வசிப்பீர்கள் என்று கேட்டதற்கு, ‘முடிவு செய்ததும் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Monday, August 15, 2011

Select anna, select yourself






You Have To Select Between

CIVIL society & EVIL society

Between

SINGH & SINGHAM

Between

SIBBAL & NOBLE

Between

BAKWAS & UPVAAS

Between

CORRUPTION & INTERRUPTION

Between

KHATARE & HAJARE

Between

CHIDAM & FREEDOM,

Select proper thing.

Select anna, select yourself

HAPPY INDEPENDENCE DAY

Jan lokpal - by the people, for the people

We are all part of this historic movement to eradicate corruption. Together, under the leadership of Anna Hazare ji, we are demanding the "Jan Lokpal Bill" – a strong law to ensure swift and certain punishment to the corrupt.
Jan Lokpal Bill is a Law being made
By the People and For the People.

Jan Lokpal Bill is presently being further refined through Public Participation Many big and small meetings are taking place across the country and suggestions are pouring in on various aspects of the law. There are some misconceptions in the minds of a few with regard to the bill. It is crucial that every citizen of India understands what Jan Lokpal Bill is all about and how it will help curb corruption. Each citizen can then give informed inputs and feedback which will contribute to better drafting of the Bill.
Here is how you can help make a difference!
  1. Watch the Jan Lokpal film - Understand all aspects of the bill. You can clarify any further doubts by going through other communication material. (Click Here)
  2. Give Feedback - Contribute to the drafting of the bill by sending in your suggestions to -lokpalbillcomments@gmail.com (Details on http://www.lokpalbillconsultation.org/)
  3. Hold public meetings - Make every citizen in your area aware of the benefits of a strong Jan Lokpal Bill (For details Click Here
  4. Spread the word - Please send this email to as many people as you can. Encourage others to join the movement.
  5. Stay involved with this movement.
Index of the Jan Lokpal film (30 minutes)
  • Anna Hazare's message (beginning to 1min 14 secs)
  • Jan Lokpal Anthem (1:14 to 1:44)
  • Independence of Lokpal (1.44 to 3:12)
  • Functions of Lokpal (3:13 to 4:44)
  • Time-bound action against corrupt (4:45 to 6.06)
  • Recovery of corruption money (6:07 to 8:15)
  • Aam aadmi ki shikayat (8:16 to 11:49)
  • Transparency in Jan Lokpal (11:50 to 17:29)
  • Judicial corruption (17:30 to 18:30)
  • Whistleblower protection (18:31 to 19:00)
  • Private companies and corruption (19:01 to 19:50)
  • Agencies to be merged (19:51 to 20:50)
  • Misconceptions / vested interests (20:51 to 29:41)
  • Benefits to the common man / 2nd freedom struggle (29:42 to 32:40)

Lokpal Vs Jan Lokpal

Lokpal Vs Jan Lokpal
==================================================================================================
லோக்பால் Vs ஜன் லோக்பால்
'லோக்பால் மசோதா' என்று பேசாத மத்திய அரசு கிடையாது. இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. இப்போது, அன்னா ஹஸாரேயின் தலைமையை ஏற்றுள்ள, முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ, முன்னாள் தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் சங்கர், சமூக ஆர்வலர்களான நிகில் தேவ், சேகர் சிங், அரவிந்த் கேஜ்ரிவால், வழக்கறிஞர்கள் சாந்திபூஷண், பிரசாந்த் பூஷண் மற்றும் முன்னாள் தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பிரத்யு சின்ஹா போன்றவர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற ஒன்றை தயாரித்தனர்.



அன்னா ஹஸாரே

அரசின் மசோதாவை நிறைவேற்றக் கூடாது, தங்களது ஜன் லோக்பால் மசோதாவை ஏற்று சட்டமாக்க வேண்டும் என்று அன்னா ஹஸாரே தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அரசின் மசோதாவில் திருத்தங்களைச் செய்வது, அந்தத் திருத்தங்களில் ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்களைச் சேர்ப்பது என்ற நோக்கத்துடன், அரசு மற்றும் 'ஊழலுக்கு எதிராக இந்தியா' இயக்கத்தின் பிரதிநிதிகளையும் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.



பிரசாந்த் பூஷண்

அரசின் மசோதாவையும், ஜன் லோக்பால் மசோதாவையும் சுருக்கமாக ஒப்பீடு செய்து பார்ப்போம். அரசு மசோதாவின்படி, ஊழல் புகார்களை பொதுமக்களிடமிருந்து லோக்பால் அமைப்பு நேரடியாகப் பெற முடியாது. மக்களவை உறுப் பினர்கள் மீதான புகார் என்றால், அவற்றை சபாநாயகரிடமும், மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான புகார் என்றால், அவற்றை மாநிலங்களவைத் தலைவரிடமும்தான் தர வேண்டும். அவர்கள் விரும்பினால் புகார்களை லோக்பால் அமைப்பிற்கு அனுப்புவார்கள்.

ஆனால், ஜன் லோக்பால் மசோதா விதிமுறைகளின்படி, யாரும் புகார் அளிக்காமலேயே கூட லோக்பால் அமைப்பு தன்னிச்சையாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும். பொதுமக்களிடம் இருந்தும் நேரடியாகப் புகார்களைப் பெற்றுக் கொள்ளும். இதற்காக யாருடைய அனுமதியும் தேவையில்லை.

அரசு மசோதாவின்படி லோக்பால் அமைப்பு, எந்தவொரு புகாரையும் விசாரித்து அறிக்கை தயாரித்து மக்களவை சபாநாயகருக்கோ, மாநிலங்களவைத் தலைவருக்கோ அனுப்பி வைக்கும். லோக்பால் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்பதும், நிராகரிப்பதும், ஏற்றுக் கொண்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைத் தீர்மானிப்பதும் அவர்கள்தான்.

ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி லோக்பால் அமைப்பு ஊழல் புகாருக்குள்ளான எந்தவொரு பொது ஊழியருக்கு எதிராகவும், விசாரணைக்கு உத்திரவிட முடியும். விசாரணையை முடித்து ஒழுங்கு நடவடிக்கைக்கும் உத்திரவிட முடியும்.

அரசு மசோதாவின்படி, லோக்பால் அமைப்பிற்கு காவல்துறையின் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. அதனால் முதல் தகவல் அறிக்கை எனும் எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்யும் அதிகாரம் லோக்பால் அமைப்பிற்கு இல்லை. லோக்பால் விசாரணை என்பது காவல்துறை விசாரணைக்கு முந்தைய துவக்க விசாரணையைப் போன்றதுதான். லோக்பால் அமைப்பின் விசாரணை அறிக்கை சபாநாயகராலும் மாநிலங்களவைத் தலைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது யார்? வழக்கை நடத்தப் போவது யார்? அதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு, அரசு மசோதாவில் விளக்கம் எதுவும் இல்லை.
ஜன் லோக்பால் மசோதாவின்படி, லோக்பால் அமைப்பு காவல்துறையின் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். அதுவே எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்யும். புலனாய்வை நடத்தும். நீதிமன்றம் போல வழக்கையும் நடத்தும்.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஸி.பி.ஐ.யின் பங்கு என்னவாக இருக்கும்? ஸி.பி.ஐ. விசாரிக்கும் புகார்களையே லோக்பால் அமைப்பும் விசாரிக்குமா, அல்லது அரசியல்வாதிகளை விசாரிக்கும் அதிகாரத்தை ஸி.பி.ஐ. இழந்து விடுமா என்பதும் தெரியவில்லை. (அரசியல்வாதிகள் தொடர்பான ஊழல் புகார்களை இப்போது ஸி.பி.ஐ. விசாரித்து வருகிறது).

ஜன் லோக்பால் மசோதாவின்படி ஊழல் புகார்களை விசாரணை செய்யும் ஸி.பி.ஐ.யின் பிரிவு, லோக்பாலுடன் இணைக்கப்படும். அதன் மூலம் ஊழல் புகார்களை விசாரணை செய்யும் திறமையான மற்றும் சுதந்திரமான அமைப்பாக அது செயல்படும்.

பொய்யான ஊழல் புகார்களைக் கொடுக்கிறவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கும் அதிகாரம், அரசு மசோதாவின்படி லோக்பால் அமைப்பிற்கு உண்டு. ஜன் லோக்பால் மசோதாவின்படி, பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

அரசு மசோதாவின்படி, லோக்பால் அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எதிரான புகார்களை மட்டுமே விசாரிக்கும். அதிகாரிகளின் ஊழல்களை விசாரணை நடத்த அதற்கு அதிகாரம் இல்லை.

ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் ஊழல்களும் லோக்பால் அமைப்பின் விசாரணைக்கு உட்பட்டது என்கிறது ஜன் லோக்பால் மசோதா. சி.வி.சி. என்கிற தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையமும், அதன் மொத்த அமைப்பும், லோக்பால் அமைப்புடன் இணைக்கப்படும் என்றும் அது கூறுகிறது.

லோக்பால் அமைப்பு மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அந்த மூன்று உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என்கிறது அரசு மசோதா.
ஜன் லோக்பால் மசோதா, லோக்பால் அமைப்பு தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அவர்களில் நான்கு பேர், சட்டத் துறையிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். (அவர்கள் நீதிபதிகளாக இருக்கத் தேவையில்லை, மற்றவர்கள் எந்த பின்னணியைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம் என்கிறது).

குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாராளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள், இரு அவைகளின் எதிர்க் கட்சித் தலைவர்கள், சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் லோக்பால் அமைப்பின் தலைவரையும், அதன் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெறுவார்கள் என்கிறது அரசு மசோதா.

ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி, லோக்பால் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் நீதித் துறையைச் சேர்ந்தவர்கள், தலைமை தேர்தல் ஆணையர், கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல், நோபல் பரிசு, மக்சேசே விருது போன்ற சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்ற இந்தியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

பிரதமருக்கு எதிராகவோ, வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பாகவோ, பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பாகவோ விசாரணை நடத்தும் அதிகாரம், அரசின் மசோதாவின்படி லோக்பால் அமைப்பிற்கு இல்லை. ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி அந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

ஒரு ஊழல் புகார் குறித்து விசாரணை செய்து முடிக்க ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரையிலான கால நிர்ணயத்தை அரசு மசோதா அனுமதிக்கிறது. அதே சமயம், வாத பிரதிவாதங்களை முடிக்க கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

ஜன் லோக்பால் மசோதாவின்படி, புகார் குறித்த புலனாய்வு ஒரு ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண் டும். அடுத்த ஒரு ஆண்டிற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி முடிக்கப்பட வேண்டும்.

புகார் அளிக்கிறவர்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது. ஊழல் புகார் அளிக்கிறவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு மசோதாவில் அதிகாரம் இல்லை. ஜன் லோக்பால் மசோதாவின்படி, பாதிக்கப்படும் புகார்தாருக்குப் பாதுகாப்பு அளிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்பிற்கு உண்டு.
ஊழல் செய்து சட்ட விரோதமாகத் திரட்டப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்கிற சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. ஊழல் புரிந்தவர்கள் சிறைத் தண்டனை முடித்து வெளியில் வந்த பிறகு, ஊழலில் சேர்த்த பணத்தைக் கொண்டு வசதியான வாழ்க்கையை அனுபவிப்பது வழக்கமாக இருக்கிறது.

ஊழலின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை எல்லா குற்றவாளிகளிடம் இருந்தும் வசூலிக்க, லோக்பால் அமைப்பிற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்கிறது ஜன் லோக்பால் மசோதா.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி, ஊழல் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத் தண்டனையும், அதிகபட்சமாக ஏழு ஆண்டு தண்டனையும் வழங்க முடியும். ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி குறைந்தபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையாகவும் உயர்த்தப்படும்